வட்டுக்கோட்டையில் மகாகவி பாரதியார் வீதி திறப்பு!

23 0
மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் நினைவு தினமான இன்று (11) வட்டுக்கோட்டையில் பாரதி வீதி திறந்துவைக்கப்பட்டது.

வட்டுக்கோட்டை தென்மேற்கு பகுதியில் இவ்வீதி அமைந்துள்ளது.

விருந்தினர்கள் மங்கல இசை வாத்தியங்கள் முழங்க அழைத்துவரப்பட்டு, மங்கல விளக்கேற்றலுடன் வீதி திறப்பு நிகழ்வு  ஆரம்பமானது.

அடுத்து, விருந்தினர்களது  உரைகளை தொடர்ந்து வீதி திறக்கப்பட்டது.

யாழ். நண்பர்கள் அமைப்பின் தலைவர் கலாநிதி சிதம்பரமோகனின் தலைமையில் நடைபெற்ற இந்த வீதி திறப்பு நிகழ்வில் மறவன்புலவு சச்சிதானந்தம் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

அத்துடன் மதகுருமார், வலி.மேற்கு பிரதேச செயலாளர் கவிதா உதயகுமார், வலி.மேற்கு பிரதேச சபை செயலாளர் சண்முகராஜா பாலரூபன், கிராம சேவையாளர் சிவபாலன் சிவகுமார், பேராசிரியர் பொன் பாலசுந்தரம்பிள்ளை, கலாநிதி கந்தையா சிவராஜா, Dr.MP.நடராஜா, வைத்தியசூரி செ.பரமசிவம்பிள்ளை, கா.கோபாலகிருஸ்ணன் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.