மசாஜ் நிலைய பணிப் பெண்கள் கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் ; பெண் உள்ளிட்ட 5 பேர் கைது

13 0

கம்பஹா, யக்கலை பிரதேசத்தில் உள்ள மசாஜ் நிலையம் ஒன்றிற்குள் வாளுடன் நுழைந்த இனந்தெரியாத நபர்கள் சிலர் அங்கிருந்த இரு பணிப் பெண்களைக் கடத்திச் சென்று கூட்டுப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பில் பெண் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் கம்பஹா பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

இந்த சம்பவத்துக்கு உதவி செய்ததாகக் கூறப்படும் 23 வயதுடைய பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர்களிடமிருந்து, பணிப் பெண்களைக் கடத்திச் செல்ல பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பணிப் பெண்கள் இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.