குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி ; இருவர் காயம்

12 0
பன்வில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹாகல தோட்டத்தில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.

ஹாகல தோட்டத்தில் இருந்த குளவி கூடு ஒன்று கலைந்ததால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது, இந்த தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த பெண்ணொருவரும் இரண்டு நபர்களும் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தவலந்தன்ன பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய நபரொருவரே உயிரிழந்துள்ளார்.