எத்திமலையில் உள்நாட்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

11 0

எத்திமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வபுரனவெல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று திங்கட்கிழமை (09) கைது செய்யப்பட்டுள்ளதாக எத்திமலை பொலிஸார் தெரிவித்தனர்.

எத்திமலை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டியாகலை பிரதேசத்தை சேர்ந்த 28 மற்றும் 33 வயதுடைய இருவரே கைது செய்யப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எத்திமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.