கண்டியில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வெடித்த பட்டாசு தொடர்பில் மூவர் கைது

12 0
கண்டியில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பட்டாசுகள் வெடித்ததால் பொலிஸ் அதிகாரிகள் உட்பட எட்டு பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாசவுக்கு சார்பாக நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்திலேயே இந்த சம்பவம் இடம்பெற்றது.

இதனையடுத்து, பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.