பதுளை – மஹியங்கனை வீதியில் விபத்து ; ஒருவர் பலி

15 0

பதுளை – மஹியங்கனை வீதியில் இன்று செவ்வாய்க்கிழமை (10) காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இராணுவத்தினருக்குச் சொந்தமான வாகனம் ஒன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, முச்சக்கரவண்டியானது இராணுவத்தினருக்குச் சொந்தமான வாகனத்திற்கும் கற்பாறைக்கும் இடையில் சிக்குண்டதில் முச்சக்கரவண்டியின் சாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.