பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை : மருந்தக உரிமையாளர் கைது

13 0

மொனராகலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மொனராகலை பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றிவளைப்பில், பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்யும் மருந்தகம் ஒன்றை நடத்திச் சென்ற சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி பிரதேசத்தை சேர்ந்த 28 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த மருந்தகத்திலிருந்து சுமார் இரண்டு இலட்சம் ரூபா மதிப்புள்ள போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று செவ்வாய்கிழமை (10) மொனராகலை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.