முல்லைத்தீவில் வீடொன்றில் மரக்குற்றிகளை வைத்திருந்த பெண் கைது

14 0

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சிவநகர் பகுதியில் வீடொன்றில் மரக்குற்றிகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கைது நடவடிக்கை நேற்றையதினம் (09.09.2024) இடம்பெற்றுள்ளது.

புதுக்குடியிருப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மரக்குற்றிகளை மீட்டதுடன், மரக்குற்றிகளை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் வீட்டின் உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான மரக்குற்றிகளும், கைது செய்யப்பட்ட சந்தேகநபரும் நாளையதினம் நீதிமன்றில் முற்படுத்தப்பட உள்ளனர்.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 40 வயது மதிக்கத்தக்க சிவநகர் பகுதியில் வசிக்கும் பெண் என்பது குறிப்பிடத்தக்கது.