சிலாபம் – புத்தளம் வீதியில் விபத்து; பாதசாரி உயிரிழப்பு

19 0

புத்தளம், முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிலாபம் – புத்தளம் வீதியில் பத்துலுஓயா பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று சனிக்கிழமை (07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

சிலாபத்திலிருந்து புத்தளம் நோக்கி பயணித்த வாகனம் ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி ஒருவர் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின்போது படுகாயமடைந்த பாதசாரி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பத்துலுஓயா பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, விபத்தினை ஏற்படுத்திய வாகனத்தின் சாரதி பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.