சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

12 0

சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரட்டுகளுடன் சந்தேக நபரொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று சனிக்கிழமை (07) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு கொச்சிக்கடை பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இந்தியாவின் சென்னை நகரத்தில் இருந்து இன்று (07) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இதன்போது, சந்தேக நபரிடமிருந்து 4,200 சிகரெட்டுகள் அடங்கிய 21 சிகரெட்டு காட்டுன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.