புத்தளத்தில் 35,000 போதை மாத்திரைகள் மீட்பு

11 0
புத்தளம் – சேரக்குளி கடற்பிரதேசத்தின் காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 35,000 போதை மாத்திரைகள் (Pregabalin Capsules) மீட்கப்பட்டுள்ளளன.

இந்த போதை மாத்திரைகளை வெள்ளிக்கிழமை (06) கடற்படையினர் மீட்டுள்ளனர்.

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது கடற்கரையோரத்தில் புதர்களுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகத்திற்கிடமான இரண்டு பெட்டிகளில் 35,470  போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

மீட்கப்பட்ட போதை மாத்திரைகள் கடல் வழியாக நாட்டுக்குள் கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

மீட்கப்பட்ட மருந்து மாத்திரைகள் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் வரை கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளன.

இவ் ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் 13,6798 போதை மாத்திரைகளை கடற்படையினர் மீட்டுள்ளனர்.