இரத்கமவில் உள்நாட்டு துப்பாக்கி, தோட்டாக்களுடன் ஒருவர் கைது

12 0

இரத்கம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கபுமுல்ல வீதிப் பகுதியில் உள்நாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன்  சந்தேக நபர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை (06) கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினர்  தெரிவித்துள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர் இரத்கம பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் ஆவார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து  உள்நாட்டு துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.