முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபரைச் சந்தித்த இந்திய துணைத் தூதுவர்

13 0

யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத்தூதுவர் சாய் முரளி முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர்  அ.உமாமகேஸ்வரனை சந்தித்து மாவட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இக் கலந்துரையாடலில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டங்கள் தொடர்பிலும் முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் எதிர்நோக்கும் பல்வேறு சவால்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.