பொலிஸ் நிலைய கூண்டில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றவர் மீட்பு

14 0

திருட்டு சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளதாக பூகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

8 ஆயிரம் ரூபா பெறுமதியான 20 அன்னாசி பழங்களை திருடிய சம்பவம் ஒன்று தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலைய கூண்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரொருவரே இவ்வாறு உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இவர் தனது மேல் சட்டையை பயன்படுத்தி பொலிஸ் நிலைய கூண்டினுள் உயிரை மாய்த்துக் கொள்ள முயன்றுள்ளார்.

இதன்போது, அங்கிருந்த பொலிஸ் அதிகாரிகள் சிலர் இவரை காப்பாற்றி தோம்பே வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.