தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; இரு வெளிநாட்டுப் பிரஜைகள் காயம்

13 0

தெற்கு அதிவேக வீதியில் 57 ஆவது கிலோமீற்றர் மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் காயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து  இன்று வெள்ளிக்கிழமை  (06) அதிகாலை இடம்பெற்றுள்ளது. லொறி ஒன்று வேன் மற்றும் கார் ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தின் போது, வேனில் பயணித்த இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகள் காயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.