காணாமல் போன மாணவனின் சடலம் கிங் கங்கையிலிருந்து மீட்பு

11 0

கிங் கங்கையில் நீராடச் சென்ற போது காணாமல் போன மாணவனின் சடலம் 06ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் மீட்கப்பட்டதாக நெலுவ பொலிஸார் தெரிவித்தனர்.

நெலுவ கடஹிங்கல பகுதியைச் சேர்ந்த ஜனிது சுரேந்திரா என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவன் இம்முறை க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவிருந்தார்.

குறித்த மாணவன் 5ஆம் திகதி வியாழக்கிழமை (5) மதியம் தனது நண்பர்களுடன் அப்பகுதிக்கு அருகில் உள்ள கிங் கங்கையில் நீராட சென்றுள்ளார்.

ஆற்றைக் கடக்க முயன்றபோது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.

காணாமல் போன மாணவனைக் கண்டுபிடிப்பதற்காக நெலுவ பொலிஸார் மற்றும் கடற்படையினர் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.