பமுனுகமவில் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது

13 0

கம்பஹா, பமுனுகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானத்துடன் பெண் ஒருவர் நேற்று (05) கைது செய்யப்பட்டுள்ளதாக பமுனுகம பொலிஸார் தெரிவித்தனர்.

பமுனுகம பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பஹா உஸ்வெட்டகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 1,012 லீற்றர் சட்டவிரோத மதுபானம் (135 போத்தல்கள்) கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பமுனுகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.