கென்யாவில் பாடசாலையில் தீ விபத்து ; 17 மாணவர்கள் பலி

17 0

கென்யாவின் மத்திய பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்துள்ளார்கள்.

10 க்கும் மேற்பட்டோர்  பலத்த தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிகப்பட்டுள்ளதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

குறித்த தீ விபத்து சம்பவம் Nyeri மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது. தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.

கென்யாவில் விடுதிகள் உள்ள பாடசாலைகளில் தீ விபத்து ஏற்படுவது வழமையான ஒன்றாக இருக்கிறது.

2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பெண்கள் பாடசாலையில் 10 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, 20 ஆண்டுகளுக்கு முன்பு நைரோபியின் தென்கிழக்கே உள்ள மச்சகோஸ் கவுண்டியில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் 67 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர்.