மாங்குளத்தில் கண்ணிவெடி வெடித்ததில் 4 பெண் பணியாளர்கள் படுகாயம்!

13 0
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம்- துணுக்காய் பகுதியில் மனித நேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த  கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் நால்வர் கண்ணிவெடி  விபத்தில் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்றுள்ளது. 

குறித்த வெடிவிபத்தில் மனிதநேய கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுப்ட்டிருந்த நான்கு பெண் பணியாளர்களே படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் 43 ,  40 , 39  வயதுடையவர்கள் என்பதுடன்  இவர்களில்  மூவர் மாங்குளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு மேலதிக சிகிச்சைக்களுக்காக கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.