இரண்டு மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டையிழந்து ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; ஒருவர் பலி, இருவர் படுகாயம்

17 0
கிளிநொச்சி ஏ9 வீதியின் பரந்தன்  பகுதியில் புதன்கிழமை (04) இரவு வேகக் கட்டுப்பட்டையிழந்த இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் இவர் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சியிலிருந்து பரந்தன் நோக்கி சகோதரர்கள் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுக்குப் பின்னால் சென்ற அதிக வேகத்தில் சென்ற மோட்டார் சைக்கிள் மோதி குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது

இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மற்றைய சகோதரன் காயமடைந்த நிலையில்  கிளிநொச்சி  மாவட்ட  பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

அத்துடன் மற்றைய  மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற ஒருவர் படுகாயமடைந்த நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

இச்சம்பவம் தொடர்பில் கிளிநொச்சிப் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தின் போது உருத்திரபுரம் கிளிநொச்சியை சேர்ந்த வைகுந்தவாசன் குமணன் (வயது – 25) என்பவரே உயிரிழந்துள்ளார்.