யேர்மனியை வந்தடைந்த ஈருருளிப்பயணப் போராளிகள்.

82 0

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் (03/09/2024)இன்று நாமன் (namen)என்னும் இடத்தில் ஆரம்பித்த ஈருருளிப்பயணமானது பஸ்ரனோகோ (bastogne) என்னும் இடத்தை மாலை 18:30 மணியளவில் சென்றடைந்துள்ளது. நாளை காலை 9மணியளவில் இதே இடத்தில் ஆரம்பித்து தெடர்ந்தும் ஈருருளிப்பயணப் போராட்டம் நடைபெறும்.

மனித உரிமைகள் ஆணையகத்தின் 57 வது கூட்டத்தொடரில் சிறிலங்கா பேரினவாத அரசினால் திட்டமிட்டு நடாத்தப்படுகின்ற தமிழின அழிப்பிற்கு அனைத்துலக சுயாதீன விசாரணையை நடாத்தக் கோரியும் தமிழீழமே தமிழர்களுக்கான நிரந்தரத் தீர்வு என்பதனை வலியுறுத்தியும் பெல்சியத்தில் 04/09/2024 இன்று காலை9மணியளவில் Bastogne என்னும் இடத்தில் இருந்து அகவணக்கத்துடன் ஆரம்பமானது.
04.09.2024 பெல்ஜியம் இலக்சம்போ்க் எல்லையில் காலை 8.30 மணிக்கு ஆரம்பம்பமாகி
04.09.2024 மதியம் 11.30 luxemburg வெளிவிவகார அமைச்சசை வந்தடையும். பின்பு
04.09.2024 மதியம் 13.00 மணி ஐரோப்பிய நீதிமன்றம் வந்தடையும் தொடர்ந்து
லக்சம்போ்க் ஜேர்மனி எல்லையில் 15.00 மணிக்கு வந்தடைந்து
05.09.2024 காலை 10.00 Saarbrucken நகரபிதா வுடனான சந்திப்பு நிகளும் அடுத்தநாள்
06.09.2024 காலை 8.30 landau நகரபிதா வுடனான சந்திப்பைத் தொடர்ந்து
06.09.2024 மதியம் 11.00 Karlsruhe நகரபிதாவுடனான சந்திப்பு நிகளுயும் அடுத்தநாள்
07.09.2024 ஜேர்மனி பிரான்ஸ் எல்லையில் 15.00 மணிக்கு கையளிப்பு.