சீனாவில் பொதுமக்கள் மீது மோதியது பாடசாலை பேருந்து – 11 பேர் பலி

17 0
image
சீனாவில் பாடசாலை பேருந்து பொதுமக்கள் மீது மோதியதில் ஐந்து மாணவர்கள் உட்பட 11 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

சீனாவின் சன்டொங் மாகாணத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பலர் காயமடைந்துள்ளனர் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.

டாய்யன் நகரில் பாடசாலைக்கு வெளியே நின்றுகொண்டிருந்த மாணவர்கள் பெற்றோர்கள் மீது பேருந்து மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்து சாரதி கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் விசாரணைகள் இடம்பெறுகின்றன என சீன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேருந்தின் கீழ் பொதுமக்கள் சிக்குண்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன.