புத்தளத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

14 0
புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் கேரள கஞ்சாவுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

கடற்படையினர் மற்றும் பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர்களுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம், கற்பிட்டி பிரதேசத்தில் வசிக்கும் 56 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து ஒரு கிலோ கேரள கஞ்சா மற்றும் கெப் வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.