துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் காயம்

16 0

மொனராகலை, நக்கல, குருந்துகொட பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் காயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

நக்கல, குருந்துகொட பிரதேசத்தில் வசிக்கும் 37 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே காயமடைந்துள்ளார்.

இவர் காணி ஒன்றில் நடந்து சென்று கொண்டிருக்கும் போது இனந்தெரியாத நபரொருவரினால் மிருகங்களை வேட்டையாடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளார்.

இதனையடுத்து காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.