புத்தளத்தில் 345 கிலோ பீடி இலை பொதிகள் மீட்பு

20 0

புத்தளம், எரெம்புகோடெல்ல மற்றும் கப்பலடி ஆகிய கடற்கரை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 345 கிலோ கிராம் நிறையுடைய பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

கடல் வழியாக இடம்பெறும் சட்டவிரோத நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காகக் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே இந்த பீடி இலை பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அதன்படி, புத்தளம், எரெம்புகோடெல்ல கடற்கரை பகுதிகளிலிருந்து 169 கிலோ கிராம் நிறையுடைய 04 பீடி இலை பொதிகளும் கப்பலடி கடற்கரை பகுதிகளிலிருந்து 176 கிலோ கிராம் நிறையுடைய 05 பீடி இலை பொதிகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பீடி இலை பொதிகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கடற்படையினரின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.