வாகனம் மோதி யானைக்குட்டி காயம்

18 0

புத்தளம் – அநுராதபுரம் வீதியில் கருவலகஸ்வெவ மீ ஓயா பாலத்திற்கு அருகில் வாகனத்தில் மோதி யானைக்குட்டி ஒன்று காயமடைந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

4 வயது மதிக்கத்தக்க யானைக்குட்டி ஒன்றே இவ்வாறு காயமடைந்துள்ளது.

இந்த யானை குட்டியானது, யானைக்கூட்டங்களுடன் இணைந்து இன்று (01) அதிகாலை வீதியைக் கடக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என கருவலகஸ்வெவ வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

காயமடைந்த யானைக்குட்டியின் நிலை கவலைக்கிடமாக உள்ளதுடன், யானைக்குட்டிக்கு தேவையான சிகிச்சைகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.