பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கரந்தெனிய சுந்தா”வின் உதவியாளர் உட்பட இருவர் கைது

17 0
பாதாள உலக கும்பலைச் சேர்ந்தவரும் பிரபல போதைப்பொருள் கடத்தல் காரருமான “கரந்தெனிய சுந்தா”வின் உதவியாளர் உட்பட இருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் எல்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வதுரவில சந்தியில் வைத்து சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 01 கிராம் 200 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் துப்பாக்கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.