ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் மூவர் கைது

14 0

கிருலப்பனை. கிராண்ட்பாஸ் மற்றும் கொழும்பு கரையோரம் ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் ஹெரோயின் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் பெண் உட்பட மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (31) கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட 03 சுற்றிவளைப்புக்களின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தெஹிவளை மற்றும் கொழும்பு 10 ஆகிய பிரதேசங்களை சேர்ந்த 48 மற்றும் 25 வயதுடைய இரு நபர்களும் வெல்லம்பிட்டி பிரதேசத்தை சேர்ந்த 48 வயதுடைய பெண்ணொருவருமே கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 22 கிராம்  670 மில்லிகிராம் ஹெரோயினும் மற்றவரிடம் இருந்து 08 கிராம் 110 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் பெண்ணிடம் இருந்து 08 கிராம்  880 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.