மின்சாரம் தாக்கி காட்டு யானை உயிரிழப்பு ; ஒருவர் கைது

17 0
மாத்தளை, யடவத்த பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட தலுபோதவத்தை பிரதேசத்தில் உள்ள காணி ஒன்றில் மின்சாரம் தாக்கி காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக மஹவெல பொலிஸார் தெரிவித்தனர்.

25 முதல் 30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மிருகங்களை வேட்டையாடுவதற்காகப் பொருத்தப்பட்டிருந்த மின்கம்பிகளில் சிக்கியே இந்த யானை உயிரிழந்துள்ளது.

இதனையடுத்து, குறித்த காணியின் உரிமையாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மஹவெல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.