ரணிலுக்கு ஆதரவாக அம்பாறையில் பிரச்சாரம் : களமிறக்கப்பட்ட குதிரைகள்!

21 0
கொழும்பில் இருந்து இரண்டு உயர் ரக வெள்ளைக்குதிரைகள் தற்போது அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பிரதான வீதிகளில் உலா வருகின்றன.

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து பிரச்சாரம் செய்வதற்காக  இந்த குதிரைகள் தினமும் வீதிகளில் உலாவுகின்றன.

ரணில் விக்ரமசிங்கவின் பிரசார கூட்டங்கள் இடம்பெறுகின்ற இடங்களை மையப்படுத்தி இந்த இரு குதிரைகளும் காட்சிப்படுத்தப்பட்டு வருவதுடன், வித்தியாசமான முறையில் மக்களிடம் ரணில் விக்ரமசிங்கவின் வெற்றிக்காக பிரசாரம் செய்வது போல் வீதிகளில் நடமாடுகின்றன.

இன்று சம்மாந்துறை பகுதியில் ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்து நடைபெறவுள்ள கூட்டத்துக்கு முன்னர், கூட்ட அழைப்புக்காக குதிரைகளை ஏற்பாட்டாளர்கள் காட்சிப்பொருளாக பயன்படுத்தி மக்களை கவர்ந்திழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ்வின் தேசிய காங்கிரஸ் கட்சியின் சின்னம் குதிரை என்பதுடன் இம்முறை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவினை அவர் ஆதரிப்பதும் குறிப்பிடத்தக்கது.