தெற்கு அதிவேக வீதியில் விபத்து ; மூவர் காயம்

18 0

தெற்கு அதிவேக வீதியில் பத்தேகம பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (21) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கொழும்பு நோக்கிப் பயணித்த காரின் சாரதி தூக்ககலக்கத்தால் வீதியின் அருகிலிருந்த பாதுபாப்பு வேலியில் மோதி நின்ற நிலையில், பின்னால் வந்த பஸ் குறித்த காருடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, காரில் பயணித்த மூவர் படுகாயமடைந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.