யாழ். சாவகச்சேரியில் சட்டவிரோத மணல் கடத்திய ஐவர் கைது!

16 0
யாழ்ப்பாணம், சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தனங்கிளப்பு மற்றும் சாவகச்சேரி பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச் சென்ற ஐந்து டிப்பர் வாகனங்களை சாவகச்சேரி பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன் ஐவரை கைது செய்துள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி  தலைமையில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் போது நேற்று (20)  மூன்று டிப்பர் வாகனங்களும் நேற்றுமுன்தினம் (19) இரண்டு டிப்பர் வாகனங்களும் கைப்பற்றப்பட்ட நிலையில் ஐந்து சந்தேக நபர்களும் கைதாகியுள்ளனர்.

அண்மைய நாட்களாக தென்மராட்சி பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றிச்சென்ற பல டிப்பர் வாகனங்கள் கைப்பற்றியுள்ளமையும்  குறிப்பிடத்தக்கது.