கல்கிசை பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரத்மலானை பிரதேசத்தைச் சேர்ந்த 37 வயதுடைய நபரொருவரும் அடகிரிய, தெலம்புகல்ல, இரத்மலானை மற்றும் ருவன்வெல்ல ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 26, 33, 34 மற்றும் 37 வயதுடைய நான்கு பெண்களுமே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கல்கிசை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்கிசை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.