ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரக் கூட்டம் உயர் மட்டத்தை எட்டியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்
சுயேட்சை வேட்பாளரான ரணில் விக்கிரமசிங்கவும் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளார்.
அதில் ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரசாரமே உயர் மட்டத்தை எட்டியுள்ளது.
அதற்கு காரணம் நாட்டின் நிலை தொடர்பில் உரியவாறு ரணில் விக்கிரமசிங்கவே நன்கு அறிந்துள்ளார்.
அதுவும் பாரிய நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்ட ஒருவர் ரணில் விக்கிரமசிங்க என்பதை அனைவரும் நன்கு அறிவர்.
மொட்டுக்கட்சிக்கு நேர்ந்துள்ள விடயத்தை இட்டு கவலை அடைகின்றேன்.
இன்னும் சிறிது காலத்தில் நெலும் மாவத்தையில் காரியாலய பதாகை மாத்திரம் இருக்கும் நிலைமையே ஏற்படும்.
எம்மிடமிருந்து எதிரணிக்கு சென்ற அனைவரும் மீண்டும் எம்முடன் இணைந்து கொண்டுள்ளனர்.