பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகுவது தங்களது காதலர்களால் !

18 0
பெரும்பாலான பாடசாலை மாணவிகள் முதலில் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாவது தங்களது காதலர்களால் என மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவ ஒன்றியத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.

நேற்று திங்கட்கிழமை (19) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாடசாலை மாணவிகளைப் போன்று மாணவர்களும் இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகுகின்றனர்.

இந்நிலையில், பாடசாலை மாணவிகளை விட மாணவர்களே அதிகளவாக பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாகி வருவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.