திரவ இயற்கை எரிவாயுவை களஞ்சியப்படுத்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து

15 0
கெரவலப்பிட்டிய “சொபாதனவி” ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு (Liquefied natural gas – LNG) களஞ்சியப்படுத்துவதற்கு உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி செய்தல், எல்என்ஜி வாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில்  இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங் நிறுவனம்(LTL Holdings Limited, Sri Lanka)மற்றும்  இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனம் (Petronet LNG Limited, India) ஆகியவற்றுக்கு இடையில் இன்று செவ்வாய்க்கிழமை (20) புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் ஆகியோரின் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.