தாயின் கையிலிருந்த வேட்டைத் துப்பாக்கி வெடித்ததில் மகன் காயம்

14 0
சூரியவெவ கபுகினிஸ்ஸ பிரதேசத்தில் தாயொருவரின் கையிலிருந்த வேட்டை துப்பாக்கி ஒன்று வெடித்தில் மூன்று வயதுடைய மகன் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

காயமடைந்த மகனின் தாயார் தென்னை மரத்திற்கு அருகில் இருந்த வேட்டை துப்பாக்கி ஒன்றினை கையில் எடுத்து சரிபார்க்க முயன்றுள்ளார்.

இதன்போது, அந்த துப்பாக்கி திடீரென வெடித்ததில் அருகிலிருந்த மகனின் கன்னத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த மகன் அம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.