மட்டக்களப்பில் காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் உயிரிழப்பு

19 0

மட்டக்களப்பு கிரான், பொண்டுகள் சேனை வீதியில் நேற்று திங்கட்கிழமை (19) காட்டு யானை தாக்கி குடும்பஸ்தர் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு கிரான், புலிப்பாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் புலிபாய்ந்தகல் பகுதியிலுள்ள தனது வீட்டிலிருந்து பூலாக்காடு பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றை நோக்கி துவிசக்கர வண்டியில் சென்று கொண்டிருந்த போது காட்டு யானை தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த கோரளைப்பற்று தெற்கு, கிரான் பகுதி திடீர் மரண விசாரணை அதிகாரி சடலத்தைப் பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு  அனுப்பி வைத்துள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் சடலமானது உறவினர்களிடம் இன்று (20) செவ்வாய்க்கிழமை கையளிக்கப்பட்டது.