தேர்தல் கடமைகளுக்கு 200,000க்கும் மேற்பட்ட அரச ஊழியர்கள்

22 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கடமைகளுக்காக 200,000 முதல் 225,000 வரையிலான அரச ஊழியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 13,000 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறும். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட அனைத்து வேட்பாளர்களுக்கும் சின்னங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.