மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லுணாவ சந்திக்கு அருகில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (18) கைது செய்யப்பட்டுள்ளதாக மொரட்டுவை பொலிஸார் தெரிவித்தனர்.
மொரட்டுவை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொரட்டுவை பிரதேசத்தைச் சேர்ந்த 25 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 450 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொரட்டுவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.