அங்குலான பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

20 0

அங்குலான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினரால் நேற்று (18) காலை கைது செய்யப்பட்டுள்ளார்.

மேல் மாகாணத்தின் தெற்கு பொலிஸ் குற்றத் தடுப்புப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவை அங்குலான பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 10 கிராம் 200 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள்  கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக அங்குலான பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குலான பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.