அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் புளத்சிங்கள பிரதேசத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக வெள்ள நிவாரணக் குழு பரகொட பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை (19) பரகொடவில் வெள்ள நிவாரணப் பணிகளில் நிவாரணக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அவசர உதவி நடவடிக்கைகளை முன்னெடுக்க இலங்கை கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.