மூன்று கோடிக்கும் அதிகமான பெறுமதியுடைய சிகரெட்டுக்களை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வந்த சீனப் பிரஜைகள் இருவர் உள்ளிட்ட மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை விமான நிலைய சுங்கப் பிரிவினர் இவர்களைக் கைதுசெய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதற்கமைய துபாயிலிருந்து வந்த ஒருவரும் குவைத்தில் இருந்து வந்த இருவருமே இவ்வாறு கைதாகியுள்ளதாக, சுங்க உதவிப் பணிப்பாளர் பராகிரம பஸ்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.