தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் – பத்துபேர் பலி

24 0
image

தென்லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து ஹெஸ்புல்லா ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது.

இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிரிய பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அவரதுஇரண்டு பிள்ளைகளும் உள்ளனர் என லெபானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐந்துபேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்,இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஹெஸ்புல்லா அமைப்பின் ஆயுதகிடங்குகளை இலக்குவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.