உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 03 துப்பாக்கிகளுடன் தம்பகல்லவில் ஒருவர் கைது

22 0

மொனராகலை, தம்பகல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடுகஸ்முல்ல பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளதாக தம்பகல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

தம்பகல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் மொனராகலை பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் ஆவார்.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மூன்று துப்பாக்கிகள் சந்தேக நபரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் தம்பகல்ல பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.