கடந்த 24 மணித்தியாலங்களில் இரத்தினபுரியில் அதிக மழைவீழ்ச்சி பதிவு!

23 0
இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24  மணித்தியாலங்களில் இரத்தினபுரி மாவட்டம் எஹலியகொடை பகுதியில் 233 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.

புலத்சிங்கள, மதுராவளை மற்றும் பாலிந்தநுவர பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட குடா மற்றும் மகுரு ஆறுகளை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த எச்சரிக்கை அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில்,  தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் ஐந்து மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலகங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இலங்கைக்கு மேலாக வளிமண்டலத்தின் கீழ் மட்டத்தில் தென்படுகின்ற தளம்பல் நிலையினால்  நாட்டின் தென்மேற்குப் பிராந்தியத்தில் நிலவுகின்ற மழையுடனான வானிலை அதிகரிக்கும் என  வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.