இந்தியாவில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர் பலி

491 0
இந்தியா-விசாகப்பட்டிணத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையர் உள்ளிட்ட நால்வர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பலியான இலங்கையர் 26 வயதானவர் என்றும் ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
சீமெந்து மூட்டைகளை ஏற்றிய லொறி ஒன்று கட்டுபாட்டை இழந்ததால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
சம்பவ இடத்திலேயே குறித்த நால்வரும் பலியாகியுள்ளதாகவும்,மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவித்துள்ளன.