பேஸ்புக் தொடர்பாக 850 முறைபாடுகள்

231 0
கடந்த 4 மாதத்திற்குள் பேஸ்புக் தொடர்பாக 850 முறைபாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதில் அதிகமானவை போலி பேஸ்புக் கணக்குகள் தொடர்பானவை என்று இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.
எனவே பேஸ்புக்கினை பயன்படுத்தும் போது மிகவும் அவதானத்துடன் பயன்படுத்துமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.