தம்புள்ளையிலுள்ள சந்தையொன்றில் தீ

18 0

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள சந்தையில் நேற்றிரவு திடீர் தீயினால் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த நிலையத்திற்கு முன்பாக உள்ள பைகள், அட்டைப் பெட்டிகள் மற்றும் விவசாய உபகரணப் பொருட்கள் விற்பனை செய்யும் கடையே இவ்வாறு தீயில் எரிந்து நாசமாகியுள்ளது

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கு மின்கசிவு காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தம்புள்ளை மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பல மணிநேர போராட்டத்துக்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாக கூறப்படுகிறது.