500 அரச பேரூந்துகள் சேவையில் ஈடுபட முடியாத நிலை

269 0

இலங்கை போக்குவரத்து சபையிடம் காணப்படும் 5500 பேரூந்துகளில் சுமார் 500 பேரூந்துகள் போக்குவரத்தில் ஈடுபட முடியாத நிலையில் காணப்படுவதாக அனைத்து இலங்கை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

எனவே அரச போக்குவரத்து சேவையான இலங்கை போக்குவரத்து சபையானது பெரும் நட்டத்துக்கு முகம் கொடுத்துள்ளதாகவும், இதனை கவனத்திற் கொண்டு இலங்கை போக்குவரத்து சபைக்கு தேவையான பேரூந்துகளை பெற்றுத் தருமாறு கோரி குறித்த சங்கமானது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக இந்த சங்கத்தின் பிரதான செயலாளர் சேபால லியனகே தெரிவித்துள்ளார்.

சிறந்த போக்குவரத்தினை முன்னெடுக்க இலங்கை போக்குவரத்து சபைக்கு இன்னும் 10,000 பேரூந்துகள் தேவைப்படுவதாக அண்மையில் போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளதாக அனைத்து இலங்கை போக்குவரத்துத் தொழிலாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.